web log free
May 20, 2024

ஜனாதிபதி ரணிலிடம் சிஐடி விசாரணை

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் வாக்குமூலம் ஒன்றைப் பெற்றுள்ளனர்.

இது ஜூலை 9ஆம் திகதி கலவரக்காரர்களால் ரணிலின் வீட்டை எரித்த சம்பவம் தொடர்பில் இந்த விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து இதுவரை சிரச அலைவரிசையின் தலைவரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதுடன், அதன் ஊடகவியலாளர்கள் சிலரிடமும் விசாரணை நடத்தப்பட உள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டனர்.