web log free
August 22, 2025

நீதிமன்றத்தில் லஞ்சம் பெற்ற பொலிஸ் சார்ஜன்ட் கைது

ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு ஒன்றுக்கு ஒத்துழைப்பதற்காக முறைப்பாட்டாளரிடம் இருந்து 20,000 ரூபா இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் ஹட்டன் நீதிமன்றில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரை இலஞ்ச ஊழல் விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

ஹட்டன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட கடனட்டை காணாமல் போனமை தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் மீது சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக கூறிய தரப்பினரிடம் சந்தேகத்திற்குரிய சார்ஜன்ட் 50,000 ரூபாவை இலஞ்சமாக கோரியுள்ளார்.

ஹட்டன் பிரதேசத்தில் வசிக்கும் இவர் மீது லஞ்ச ஊழல் விசாரணைப் பிரிவினரிடம்  முறைப்பாடு செய்ததன் அடிப்படையில், இலஞ்ச ஊழல் விசாரணைப் பிரிவின் அதிகாரிகள், சார்ஜன் 20,000 ரூபாயை பெறும்போது கைது செய்துள்ளனர். 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd