web log free
December 12, 2025

நாட்டின் அனைத்து திருப்பலிகளும் ரத்து

நாட்டில் உள்ள அனைத்து கத்தோலிக்க தேவாலயங்களிலும் இன்று மாலை நடைபெறவிருந்த இயேசு கிறஸ்துவின் உயிர்ப்பு பெருவிழா திருப்பலிகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் காணப்படும் தேவாலாயங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று முற்பகல் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தை அடுத்து, இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கொழும்பு பேராயர் இல்லம் அறிவித்துள்ளது.

இன்று இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்களில் கட்டான கட்டுவாபிட்டி தேவாலயத்தில் 62 பேர் உயிரிழந்ததுடன், ஆறு இடங்களில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்களில் இதுவரை 134 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd