web log free
January 04, 2026

சஜித்தின் சகோதரியிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணை

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்திற்கு தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் சகோதரி இன்று குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.

வாக்குமூலமொன்றை வழங்கிய பின்னர் ஊடகவியலாளர்களிடம் பேசிய துலாஞ்சலி பிரேமதாச, சம்பவம் இடம்பெற்ற போது அப்போதைய பிரதமரின் வீட்டிற்கு அருகில் தான் இருந்ததாகவும், விசாரணைகளுக்கு உதவுவதற்காக வாக்குமூலமொன்றை வழங்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தன்னிடம் கூறியதாகவும் தெரிவித்தார்.

ரணில் விக்கிரமசிங்கவின் கொழும்பு 5 வது பாதையில் உள்ள தனியார் இல்லம் ஜூலை 9 ஆம் தேதி கொழும்பில் உள்ள ஜனாதிபதி மாளிகை உட்பட பல அரச நிறுவனங்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் முற்றுகையிட்டதைத் தொடர்ந்து நடந்த சம்பவங்களைத் தொடர்ந்து எரிக்கப்பட்டது

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd