web log free
February 05, 2026

ஜனாதிபதி ரணிலின் நடவடிக்கைகளுக்கு மொட்டுக் கட்சி எம்பிக்கள் பலர் எதிர்ப்பு

பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 22 ஆவது அரசமைப்பு திருத்தச் சட்டமூலத்தின் சரத்துக்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஜனாதிபதியிடம் மனுவொன்றை கையளிப்பதற்கு ஏறத்தாழ எண்பது பாராளுமன்ற உறுப்பினர்கள் முயற்சித்து வருகின்றனர்.

பாராளுமன்றத்தை கலைப்பதற்கான அதிகாரத்தை ஜனாதிபதிக்கு வழங்கும் சரத்துகள் திருத்தப்படாவிட்டால் மேற்படி சட்டமூலத்தின் மீதான வாக்கெடுப்பில் கலந்துகொள்ள மாட்டோம் என இதன் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் மற்றும் எதிர்க்கட்சி மற்றும் சுயேச்சை உறுப்பினர்கள் குழுவும் இந்த மனுவை முன்வைக்கத் தீர்மானித்துள்ளனர்.

பாராளுமன்றத்தை கலைக்கும் அதிகாரத்தை தற்போதுள்ள அரசியலமைப்பில் இரண்டரை வருடங்களில் இருந்து நான்கரை வருடங்களாக மாற்ற வேண்டும் என அவர்கள் கோருகின்றனர்.

22வது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் தற்போது பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு அது விவாதத்திற்கு உட்படுத்தப்பட்டு நிறைவேற்றப்பட உள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd