web log free
September 07, 2024

'வதந்திகளை நம்ப வேண்டாம்'

கொழும்பு, கட்டான மற்றும் மட்டக்களப்பு பிரதேசங்களில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் உண்மைக்கு புறம்பான தகவல்களை நம்பி குழப்பமடைய வேண்டாம் என அரச தகவல் திணைக்களம் பொதுமக்களிடம் கோரியுள்ளது.

இது தொடர்பில் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களை பொது மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக, அரச தகவல் திணைக்களம் கூறியுள்ளது.