web log free
February 05, 2026

பல எரிபொருள் நிலையங்களுக்குப் பூட்டு

போதுமான எரிபொருள் இருப்பு இல்லாத  காரணத்தினால் கொழும்பு மற்றும் ஏனைய பகுதிகளில் உள்ள பல எரிபொருள் நிரப்பு நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

அதன்படி சுமார் 3 நாட்களாக எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் மீண்டும்  வரிசைகள் உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு வழங்கப்படும் எரிபொருளின் அளவு குறைக்கப்பட்டதன் காரணமாக மீண்டும் எரிபொருள் வரிசைகள் ஏற்பட்டுள்ளதாக பெற்றோலிய விநியோக சங்கம் தெரிவித்துள்ளது.

அதுமட்டுமின்றி, நாட்டுக்கு வந்துள்ள சுப்பர் டீசல் கப்பலின் டீசல் சரக்குகளை இறக்கும் பணியும் நடைபெற்று வருவதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd