web log free
October 24, 2025

பொய்யான செய்திகள் குறித்து பொதுமக்கள் பீதியடைய வேண்டாம்-CPC

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விநியோகிப்பதற்கு போதுமான எரிபொருள் கையிருப்பு நாட்டில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சப்புகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையத்தில் அனைத்து வகையான எரிபொருள்களும் உற்பத்தி செய்யப்படுவதாகவும், கொலன்னாவ மற்றும் முத்துராஜவெல முனையங்களில் இறக்குமதி செய்யப்பட்ட எரிபொருள் போதுமான அளவு கையிருப்பில் இருப்பதாகவும் CPC தெரிவித்துள்ளது.

எனவே, எரிபொருள் கையிருப்பு முடிந்துவிட்டதாகக் கூறும் பொய்யான செய்திகள் குறித்து பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் என்று CPC கேட்டுக்கொள்கிறது

Last modified on Monday, 29 August 2022 06:25
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd