web log free
June 05, 2026

தேஷ்பந்து தென்னகோன் மீது தாக்குதல் நடத்திய நபர்கள் கைது

மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் மற்றும் மேலும் இரு பொலிஸ் உத்தியோகத்தர்களைத் தாக்கிய குற்றச்சாட்டில் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இத்தாக்குதல் கடந்த மே மாதம் 10 ஆம் திகதி கொள்ளுப்பிட்டி பகுதியில் இடம்பெற்றது.

நேற்று (29) மாலை கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் குறித்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

31, 51 மற்றும் 52 வயதுடைய பிடபெத்தர மற்றும் கொழும்பு 15 ஆகிய பகுதிகளில் வசிக்கும் நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd