நீர்கொழும்பு நீதிமன்றத்திற்கு அருகில் இருந்த இருவர் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.
சம்பவத்தில் காயமடைந்த இருவரும் நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
குறித்த இருவரும் கட்டான தெமன்ஹந்திய பிரதேசத்தில் வசிக்கும் 40 மற்றும் 51 வயதுக்கு இடைப்பட்டவர்கள்.