இலங்கைக்கு 2 பில்லியன் டொலர் அவசர நிதி உதவி வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இலங்கைக்கான ஆசிய அபிவிருத்தி வங்கியினால் அங்கீகரிக்கப்பட்ட திட்டங்களின் நிதியை மீள் திட்டமிடல் மூலம் இந்த நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
பாதிக்கப்படக்கூடிய மற்றும் ஏழைக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும், உணவுப் பாதுகாப்பை அதிகரிக்கவும் இந்தக் கடன் பயன்படுத்தப்படும் என்று ஆசிய வளர்ச்சி வங்கி தெரிவித்துள்ளது.