web log free
April 28, 2025

எரிபொருள் விநியோக தாமதத்திற்கான காரணம் வௌியானது

எரிசக்தி அமைச்சு ஒரு வருடத்தில் 699 மில்லியன் ரூபாவை அதாவது ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் எரிபொருள் இறக்குமதிக்காக செலவிடுவதாக கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது.

கொழும்பு துறைமுகத்தில் உள்ள களஞ்சியத்தில் இருந்து கொலன்னாவ முனையத்திற்கு 75 வருடங்களுக்கு மேற்பட்ட 10 அங்குல விட்டம் கொண்ட 5 குழாய் அமைப்புகளின் ஊடாக எரிபொருள் கொண்டு செல்லப்படுவதாகவும், இன்று கசிவு மற்றும் சிதைவுகளுடன் 2 குழாய் அமைப்புகளே பாவனையில் உள்ளதாகவும் கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்த குழாய் அமைப்பு அதன் செயல்பாட்டு மற்றும் பயனுள்ள ஆயுட்காலத்தை தாண்டிவிட்டதால், குறைந்தபட்சம் மணிக்கு 200 மெட்ரிக் டன் அழுத்தத்தில் எரிபொருள் இறக்கப்படுவதாகவும், 40,000 மெட்ரிக் டன் கப்பலை இறக்குவதற்கு குறைந்தது 8 நாட்கள் ஆகும் என்றும் கணக்காய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், 2021 ஆம் ஆண்டிற்கான எரிசக்தி துறையின் வருடாந்திர செயல்திறன் அறிக்கையானது, அதிகபட்சமாக 04 நாட்களுக்கு, அதாவது 96 மணிநேரத்திற்கு எரிபொருள் இறங்கும் நடவடிக்கைகளுக்கு கப்பல் நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்வதால், ஒரு நாளுக்கான தாமதக் கட்டணமாக 18,000 அமெரிக்க டாலர்கள் செலுத்த வேண்டும் என்று விளக்கியுள்ளது. 

அதன்படி, ஒரு கப்பல் எரிபொருளை இறக்குவதற்கு 7 நாட்கள் எடுத்துக் கொள்வதால், நாளொன்றுக்கு ஒரு கப்பலுக்கு 19 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமாகவும், தாமதமாக 57 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமாகவும் செலவழிக்கப்படுவதாக கணக்காய்வாளர் நாயகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரியவந்துள்ளது.

ஒரு மாதத்திற்கான கட்டணம் மட்டும். 5,750 மீற்றர் நீளமுள்ள எரிபொருள் போக்குவரத்துக் குழாய் அமைப்பின் தரைப் பிரிவின் திருத்தப் பணிகளுக்காக 94 மில்லியன் ரூபா செலவிடப்படுமென மதிப்பிடப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சின் வருடாந்த செயற்திறன் அறிக்கை தெளிவுபடுத்தியுள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd