web log free
September 08, 2024

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 190ஆக அதிகரிப்பு

கொழும்பு உள்ளிட்ட நாட்டின் 8 பகுதிகளில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்கள் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 190ஆக அதிகரித்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பு – கொச்சிக்கடை தேவாலயம், நீர்கொழும்பு – கட்டுவாபிட்டி தேவாலயம், கொழும்பு -ஷங்கரிலா ஹோட்டல், மட்டக்களப்பு - சீயோன் தேவாலயம், கொழும்பு - சின்னமன் ஹோட்டல்

,கொழும்பு - கிங்ஸ்பெரி ஹோட்டல், தெஹிவளை - மிருககாட்சி சாலைக்கு அருகில் உள்ள ஹோட்டல்,தெமட்டக்கொடை பகுதியில் உள்ள வீடு ஆகியவற்றில் வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இதேவேளை, இந்த வெடிப்பு சம்பவங்களில் படுகாயமடைந்த நிலையில் 450துக்கும் அதிகமானவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வைத்திசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.