web log free
April 27, 2024

கோத்தபய ராஜபக்ச இலங்கை திரும்பினார்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாடு திரும்பியுள்ளார்.அவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சற்று முன்னர் தரையிறங்கியதாக தெரிவிக்கப்படுகின்றது

.தாய்லாந்திலிருந்து சிங்கப்பூர் வழியாக அவர் நாட்டை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவரை வரவேட்பதற்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விமானநிலையம் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை மாதம் அவர் ராஜினாமா செய்ய வழிவகுத்த வெகுஜன எதிர்ப்புகளைத் தொடர்ந்து அவர் இலங்கையை விட்டு வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது