web log free
May 15, 2026

20ம் திகதிக்குப் பின் எப்போது வேண்டுமானாலும் தேர்தல்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை மார்ச் 25ஆம் திகதிக்கு முன்னர் நடத்த வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் இந்த ஆண்டுடன் முடிவடையவிருந்த போதிலும் உள்ளூராட்சி அமைச்சரின் அதிகாரத்தின் பிரகாரம் பதவிக்காலம் ஒரு வருடத்திற்கு நீடிக்கப்பட்டது.

அதன்படி உள்ளூராட்சி மன்ற தேர்தலை இம்மாதம் 20ஆம் திகதிக்கு பின்னர் நடத்த முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd