web log free
May 18, 2024

பாடசாலைக்கு போதைப்பொருள் கொண்டு வருவதை தடுக்க, புத்தக பைகளை சோதனை செய்ய அனுமதி

பாடசாலைகளுக்கு போதைப்பொருள் கொண்டு வரப்படுவதை தடுக்கும் நோக்கில் பாடசாலை மாணவர்களின் பைகளை பரிசோதிப்பதற்கான சுற்று நிருபம் அடுத்த வாரத்திற்குள் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

முன்னதாக, பாடசாலை அபிவிருத்திக் குழு, பெற்றோர்கள், பழைய மாணவர்கள், பெண்கள் மற்றும் பாடசாலை அதிபர்கள் ஆகியோரின் ஆதரவுடன் அனைத்துப் பாடசாலைகளும் காலையில் பாடசாலை பைகளை பரிசோதிக்கும் நடைமுறையை முன்னெடுத்ததாக பாராளுமன்றத்தில் அவர் தெரிவித்தார்.

இருப்பினும், அறியப்படாத காரணங்களுக்காக இந்த நடைமுறை நிறுத்தப்பட்டது. பாடசாலை மாணவர்கள் ஊடாக போதைப்பொருள் பாடசாலைகளுக்குள் நுழைவது தொடர்பில் சில கலந்துரையாடல்கள் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

எனவே, இந்த நடவடிக்கைகள் மிகவும் கவனமாகவும் முறையாகவும் நடைபெறுவதால் பள்ளிப் பைகளை பரிசோதிக்குமாறு, அமைச்சர் அனைத்துப் பாடசாலைகளுக்கும் மாகாணக் கல்விப் பணிப்பாளர் ஊடாக சுற்றறிக்கை ஒன்றை வெளியிட உள்ளார்.