web log free
August 22, 2025

கொழும்பில் மற்றுமொரு துப்பாக்கிச் சூடு

கொழும்பு வாழைத்தோட்டம் புனித செபஸ்தியான் வீதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

முகமூடி அணிந்த இருவர், சென். செபஸ்டியன் தெருவில் உள்ள வீடொன்றிற்குள் நபர் ஒருவரை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வாழைத்தோட்டத்தில் வசிக்கும் 40 வயதுடைய ஒருவரே இவ்வாறு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd