web log free
September 08, 2024

இன்று இரவு மீண்டும் ஊரடங்கு சட்டம்

இன்று இரவு 8 மணி முதல் நாளை அதிகாலை 4 மணி வரை நாடளாவிய ரீதியில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டில் நேற்று இடம்பற்ற 8 வெடிப்பு சம்பவங்களை அடுத்து ஏற்பட்ட அசாதாரண நிலைமை காரணமாக உடனடியாக அமுலுக்கு வரும் நாடு முழுவதும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் நேற்று பிற்பகல் அமுல்படுத்தப்பட்டது.

அதனையடுத்து, இன்று காலை 6 மணிமுதல் இந்த ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டிருந்த நிலையில், இன்றைய தினமும் நாடளாவிய ரீதியில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.