web log free
October 22, 2025

ஏற்றுமதிக்கு இந்தியா தடை, இலங்கையில் கோதுமை மா தட்டுப்பாடு

சந்தையில் போதிய அளவு கோதுமை மாவு இருப்பதாக வர்த்தக அமைச்சர் தெரிவித்தாலும் இன்னும் மூன்று வாரங்களில் பாண் மாவிற்கு தட்டுப்பாடு ஏற்படும் என இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தியா மாவு ஏற்றுமதியை நிறுத்தியதால் இறக்குமதியாளர்கள் கோதுமை மாவு இறக்குமதியை நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

மாவு பற்றாக்குறையால் சுமார் 300 பேக்கரிகள் மூடப்பட்டுள்ளன. எனினும் தற்போது துருக்கி மற்றும் டுபாயில் இருந்து இலங்கை கோதுமை மாவை இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது.

அந்த நாடுகளில் இருந்து இறக்குமதியாளர்கள் தருவிப்பு செய்த மாவை ஏற்றிய கப்பல்கள் இம்மாதம் 30ஆம் திகதி இலங்கையை வந்தடையும்.

ஆனால் சந்தையில் போதுமான அளவு கோதுமை மாவு இருப்பதாக வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்தார்.

இந்தியாவும் மாவு ஏற்றுமதியை கட்டுப்படுத்த முடிவு செய்துள்ளது. ஏற்றுமதி செய்யப்படும் ஒவ்வொரு கிலோகிராம் மாவுக்கும் 20% வரி விதிக்க அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

எனவே இந்தியாவில் இருந்து மாவை இறக்குமதி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக இந்நாட்டு இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd