நஷ்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களை மறுசீரமைக்க அல்லது மூடவும், அதேபோன்ற நிறுவனங்களை இணைக்கவும் அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
அரசின் தொடர் செலவுகளை குறைக்கவும், தேவையற்ற செலவுகளை குறைக்கவும் இந்த திட்டம் செயற்படுத்தப்படவுள்ளது.
பொருளாதார நெருக்கடிக்கு விரைவான தீர்வுகளைப் பெற்று நேரடியான மற்றும் விரைவான பதில்களைப் பெறக்கூடிய முதலீடுகள் வடிவில் உள்ள திட்டங்களுக்கு மட்டுமே அதிக கவனம் செலுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அடுத்த ஆண்டுக்கான குறைந்தபட்ச செலவில் நிறுவனத்தின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்குத் தேவையான பணத்திற்கு விண்ணப்பிக்குமாறு நிதி அமைச்சகம் ஏற்கனவே அரசாங்க நிறுவனங்களுக்கு அறிவித்துள்ளது.