web log free
May 08, 2025

மாணவர்களுக்காகத் திறக்கப்பட்டது பாராளுமன்ற கதவு

பாராளுமன்ற கூட்டங்கள் நடைபெறாத நாட்களில் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஏனைய தரப்பினர் பாராளுமன்றத்திற்கு வருகை தருவதற்கு சந்தர்ப்பம் வழங்குவதற்கு பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழு நேற்று (13) தீர்மானித்துள்ளது.

இதன்படி, அன்றைய தினங்களில் அவர்கள் பாராளுமன்றத்தின் பொது காட்சியகங்களை பார்வையிடும் வாய்ப்பும் கிடைக்கும்.

கோவிட் மற்றும் நாட்டின் பாதுகாப்பு நிலைமை காரணமாக, பாராளுமன்றத்திற்கு வருகை தருவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

பாராளுமன்றத்திற்கு செல்வதற்கான கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டியதன் அவசியத்தை சார்ஜன்ட் நரேந்திர பெர்னாண்டோ நேற்று (13) பாராளுமன்ற அலுவல்கள் குழுவின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.

அதன் பின்னரே நாடாளுமன்றக் குழு மேற்கண்ட முடிவை எடுத்துள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd