web log free
May 06, 2024

கெட்ட வார்த்தைகளால் திட்டு வாங்கி தாக்குதலை எதிர்கொண்ட அமைச்சர்

அரசாங்க அமைச்சர் ஒருவரை கெட்ட வார்த்தைகளால் திட்டிய இருவர் ஹெல்மெட்டால் தாக்கியதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

நேற்று மதியம் உள்ளூராட்சி சபை உறுப்பினர் ஒருவருக்கு சொந்தமான வர்த்தக நிலையத்தின் முன்பாக அமைச்சர் வாகனத்தை நிறுத்தி உரையாடிக் கொண்டிருந்த போதே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

எனினும், அமைச்சரின் மெய்ப்பாதுகாவலர்கள் தலையிட்டு தாக்குதலைத் தடுத்ததால், இந்தத் தாக்குதலில் இராஜாங்க அமைச்சருக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை.

தாக்குதல் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.