web log free
September 03, 2025

உயிரிழந்தவர்களுக்கு ஒரு மில்லியன் ரூபாய் நட்டஈடு

நாட்டின் பல்வேறு பகுதிகளில் நேற்று இடம்பெற்ற வெடிப்புக்களின் போது உயிரிழந்துள்ளவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படவுள்ளது.

உயிரிழந்தவர்களுக்கு தலா ஒரு மில்லியன் ரூபாய் இழப்பீடாக வழங்குதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதுடன், இறுதி சடங்குளுக்காக ஒரு இலட்சம் ரூபாயை வழங்கவுள்ளது.

இன்று காலை இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன்,

காயமடைந்தவர்களுக்கு ஒரு இலட்சம் ரூ முதல் மூன்று லட்சம் வரை இழப்பீடாக வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd