web log free
December 15, 2025

ஐந்து மாகாணங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் ஐந்து மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி, மேல் மாகாண ஆளுநராக அசாத் சாலியும் கிழக்கு மாகாண ஆளுநராக எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வடமத்திய மாகாண ஆளுநராக சரத் ஏக்கநாயக்க, மத்திய மாகாண ஆளுநராக மைத்திரி குணரத்ன, வடமேல் மாகாண ஆளுநராக பேசல ஜயரத்ன ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நியமனங்கள், செயலகத்தில் வைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் வழங்கப்பட்டுள்ளன.

Last modified on Friday, 04 January 2019 14:25
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd