web log free
August 21, 2025

172 மில்லியன் மதிப்புள்ள தங்கத்துடன் நான்கு பயணிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

172 மில்லியன் மதிப்புள்ள தங்கத்துடன் நான்கு பயணிகள் இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆரம்பத்தில் 160 மில்லியன் ரூபா பெறுமதியான 7.5 கிலோ தங்கத்துடன் மூன்று பயணிகள் கைது செய்யப்பட்டதாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.

இவர்கள் இன்று அதிகாலை ஓமானில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

சந்தேக நபர்கள் தங்கத் தகடுகளை தங்களுடைய பயணப் பொதிக்குள் மறைத்து வைக்க முற்பட்டதையடுத்து சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, அதே விமானத்தில் வந்த மற்றுமொரு பயணி ஒரு கிலோ தங்கத்துடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

Last modified on Friday, 30 September 2022 08:59
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd