web log free
April 25, 2024

கொழும்பு - அவிசாவளை வீதி தற்காலிக மூடல்

கொழும்பு – அவிசாவளை வீதியில் வெல்லம்பிட்டிய சந்தியிலிருந்து கொட்டிகாவத்தை சந்தி வரையிலான வீதி வார இறுதியில் தற்காலிகமாக மூடப்படும்.

சனிக்கிழமை (01) இரவு 10.00 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை (02) மாலை 05.00 மணி வரை குறித்த வீதி மூடப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.

எவ்வாறாயினும், பிரதேசவாசிகள் தமது தேவைகளுக்காக வீதியைப் பயன்படுத்துவதற்கு குறிப்பிட்ட கால அவகாசம் வழங்கப்படும்.

கடுவெலயிலிருந்து ஒருகொடவத்தை வரையிலான நீர் குழாய்களின் அவசர பராமரிப்பு பணிகள் காரணமாகவே குறித்த வீதி தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த காலப்பகுதியில் வீதியை பயன்படுத்துவோருக்கு பின்வரும் மாற்று வழிகளை பொலிஸார் அறிவித்துள்ளனர்.

கொழும்பு நோக்கி பயணிக்கும் வாகனங்கள் வெல்லம்பிட்டி சந்தி ஊடாக கொலனாவ ஊடாக கொதட்டுவ நகருக்கு சென்று அங்கிருந்து கொட்டிகாவத்தை சந்தியை அடைந்து அவிசாவளை வீதியில் பிரவேசிக்க முடியும்.

அவிசாவளையில் இருந்து வரும் வாகனங்கள் கொத்தடுவ நகரை கொட்டிகாவத்தை சந்தி வழியாக சென்று கொலன்னாவை வழியாக வெல்லம்பிட்டி சந்திக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.