web log free
April 27, 2025

சரியாக சாப்பிட்ட நாள் ஞாபகம் இல்லை என தெரிவித்து குழந்தைகளுடன் பொலிஸ் நிலையம் சென்ற தாய்

நீண்ட நாட்களாக உணவு கிடைக்கவில்லை என கூறி தாய் ஒருவர் தனது இரண்டு குழந்தைகளுடன் மாதம்பே பொலிஸ் நிலையத்திற்கு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இந்த தாய் இரண்டரை மற்றும் ஐந்து வயதுடைய இரண்டு குழந்தைகளுடன் வந்துள்ளார்.

கடற்றொழில் செய்து வரும் தனது கணவர் தன்னையும் பிள்ளைகளையும் கவனிப்பதில்லை எனவும் பிள்ளைகளுடன் அடிக்கடி பட்டினி கிடப்பதாகவும் தாய் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

நூறு ரூபாய்க்கு வாங்கிய வாழைப்பழங்கள் தான் கடைசியாக சாப்பிட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

அங்கு அவர்களுக்கு மதிய உணவும், உலர் உணவும் வழங்க போலீஸ் இன்ஸ்பெக்டர் ஏற்பாடு செய்துள்ளார்.

பெண்ணின் கணவரை காவல் நிலையத்திற்கு வரவழைத்து அவர்களை நல்ல முறையில் நடத்துங்கள் அல்லது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd