web log free
April 27, 2025

காணாமல் போன இளைஞன் சடலமாக மீட்பு

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவில் புதூர் பிரதேசத்தில் காணாமல் போன இளைஞன் 5 நாட்களின் பின்னர் அப்பிரதேச மயானத்தில் உருக்குலைந்த நிலையில் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார்.

புதூர் 5ஆம் குறுக்கைச் சேர்ந்த 24 வயதுடைய ஜெயகரன் அருஜன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார்.

புதூர் மயானத்தில் உருக்குலைந்த நிலையில் சடலம் ஒன்று கிடப்பதாக பொதுமக்கள் பொலிசாருக்கு சம்பவதினமான தகவல் வழங்கியதையடுத்து தடவியல் பிரிவு பொலிசாரின் விசாரணைகளில் கடந்த மாதம் 27 ம் திகதி செவ்வாய்கிழமை வீட்டை விட்டு வெளியேறிய காணாமல் போன இளைஞனே 5 நாட்களின் பின்னர் சடலமாக மீடக்கப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd