web log free
April 25, 2024

கஞ்சா பிரியரான இராஜாங்க அமைச்சர்

கஞ்சாவை ஆயுர்வேதப் பொருட்களாக சட்டப்பூர்வமாக்குவது தொடர்பான சட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் மருத்துவ இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான சட்டங்கள் விரைவில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகரிக்கப்படும் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி இதனைத் தெரிவித்துள்ளார்.