web log free
March 31, 2026

சப்புகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையத்திற்கு மூடுவிழா

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றிய போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கச்சா எண்ணெய்க்கான அந்நிய செலாவணி தட்டுப்பாடு காரணமாக சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையத்தை இவ்வாறு மூட தீர்மானிக்கப்பட்டதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

எனினும் சுத்திகரிக்கப்பட்ட பொருட்களில் தட்டுப்பாடு ஏற்படாது என அமைச்சர் குறிப்பிட்டார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd