web log free
September 03, 2025

திலினிக்கு சிறையில் தொலைபேசி வழங்கிய பெண் கைதி சிக்கினார்

பாரிய நிதி மோசடி குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியாமாலியிடம் இருந்து கண்டெடுக்கப்பட்ட கையடக்கத் தொலைபேசி மற்றுமொரு பெண் கைதி ஒருவரினால் வழங்கப்பட்டதாக தற்போதைய விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அது தொடர்பில் சிறைச்சாலையின் மகளிர் பிரிவு அதிகாரிகள் மற்றும் கண்காணிப்பாளர்களிடம் இருந்து தற்போது வாக்குமூலம் பெற்று வருவதாக சிறைச்சாலை ஆணையாளரின் கட்டுப்பாட்டாளரும் ஊடகப் பேச்சாளருமான சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.

கண்டுபிடிக்கப்பட்ட கையடக்கத் தொலைபேசி மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இது ஒரு சிறிய கையடக்கத் தொலைபேசி என அடையாளம் காணப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd