web log free
April 27, 2025

சட்டவிரோத பணத்தைப் பயன்படுத்தியதற்காக ஒருவர் கைது

சட்டவிரோதமான முறையில் சம்பாதித்த பணத்தைப் பயன்படுத்தி கொள்வனவு செய்யப்பட்ட இரண்டு வாகனங்களை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் 20 வயதுடைய இளைஞர் ஒருவர் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

6.5 மில்லியன் ரூபா பெறுமதியான கார் ஒன்றை கொள்வனவு செய்தமை தொடர்பில் இப்பிரிவு விசாரணைகளை ஆரம்பித்திருந்தது. .
இரண்டு வாகனங்களும் சந்தேகநபர் தனது தந்தை சட்டவிரோதமாக சம்பாதித்த பணத்தில் கொள்வனவு செய்துள்ளதாக விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

பொரலஸ்கமுவ பிரதேசத்தில் வசிக்கும் 20 வயதுடைய சந்தேகநபரை, சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினர் நேற்று (10) கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர் இன்று புதுக்கடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd