web log free
April 02, 2025

ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விவகாரம்; குழு நியமனம்

ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தை மீளக் கட்டியெழுப்புவது தொடர்பில் ஆராய்வதற்காக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேவால் குழுவொன்று நியமிக்கப்படவுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இக்குழு, எதிர்வரும் திங்கட்கிழமை (07) நியமிக்கப்படவுள்ளதாகவும் ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தை மீளக் கட்டியெழுப்புவது தொடர்பான கருத்துகளையும் பரிந்துரைகளையும் முன்வைப்பதற்காகவுமே, இக்குழு அமைக்கப்படவுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd