web log free
May 08, 2025

களத்தில் நின்று சந்தேகநபர்களை கைது செய்ய வைத்த செந்தில்

கனவரெல்ல EGK தோட்ட பிரிவில் தோட்ட தொழிற்சாலையில் கடமை புரிந்த 25 வயதுடைய இளைஞர் திடீர் விபத்தில் உயிரிழந்தார்.

இதனையடுத்து தோட்ட நிர்வாகத்தின் மீது பொலிஸார் வழக்கு பதிவு செய்ததாலும், தோட்ட நிர்வாகத்திடமிருந்து நியாயமான தீர்வு கிடைக்கவில்லை.

இதனால் இளைஞனின் பூதவுடல் அடக்கம் செய்யாமல் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் தலையீட்டால் தொழிற்சாலைக்குள் பலவந்தமாக வைக்கப்பட்டது.

இந்நிலையில் களத்தில் செந்தில் தொண்டமான் கொடுத்த தொடர் அழுத்ததினால் 5வது நாளான நேற்று இச்சம்பவத்துடன் தொடர்புடைய தோட்ட நிர்வாகத்தினர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்றைய தினம் சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளனர்.

இதனை அடுத்து பூதவுடல் தொழிற்சாலையிலிருந்து இளைஞனின் வீட்டிற்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது. 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd