web log free
April 26, 2025

தொடரும் கனமழை - 13 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

குறைந்த அளவிலான வளிமண்டல தாழமுக்கம் இன்னும் நாட்டின் அருகாமையில் நீடிக்கிறது.

எனவே, அடுத்த 24 மணிநேரத்தில் தற்போதைய மழை பெய்யும் நிலை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டின் பல பகுதிகளிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் மேற்கு, சப்ரகமுவ, மத்திய, தெற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்கள் மழை மிகவும் கனமானது. அப்பகுதிகளில் 150 மில்லிமீற்றர் மழையை எதிர்பார்க்கலாம். இதனால் 13 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

மண்சரிவு, இடி, மின்னல் தாக்கம் மற்றும் வௌ்ளம் ஏற்படும் அபாயம் 13 மாவட்டங்களுக்கு காணப்படுவதாக வானிலை அவதான நிலையம் எச்சரித்துள்ளது. 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd