web log free
April 26, 2025

இலங்கை மீனவர்கள் சிலர் இந்தியாவில் கைது

இந்திய கடல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் இலங்கை மீனவர்கள் அவ்வப்போது அத்துமீறி வந்து மீன்பிடித்து செல்கின்றனர்.

இதனை தடுக்கும் விதமாக கடலோர பாதுகாப்பு படை வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் தூத்துக்குடியில் இருந்து 150 கடல்மைல் தூரத்தில் 5 இலங்கை மீனவர்கள் படகில் நின்றனர். அவர்களை இந்திய கடலோர காவல் படையினர் கைது செய்தனர்.

மேலும் அவர்களது படகினையும் பறிமுதல் செய்தனர். இது குறித்து தூத்துக்குடி கடலோர பாதுகாப்பு குழுமத்திற்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட 5 மீனவர்கள் இன்று இரவு தூத்துக்குடி தருவைகுளம் அல்லது நெல்லை மாவட்டம் கூடங்குளத்திற்கு கொண்டு வரப்படுகிறார்கள்.

பின்னர் அங்கு வைத்து அவர்களிடம் கியூபிரிவு போலீசார், சிறப்பு பாதுகாப்பு படையினர், இந்திய கடலோர பாதுகாப்பு குழுமத்தினர் தனித்தனியாக விசாரணை நடத்துவார்கள்.

அப்போது அவர்கள் எதற்காக அத்துமீறி இந்திய கடல்பகுதியில் நுழைந்தார்கள் என தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd