web log free
May 18, 2024

புதிய அமைச்சரவையை நியமிக்குமாறு ஜனாதிபதிக்கு மொட்டுக் கட்சி அழுத்தம்

அரசாங்க அமைச்சர்கள் குழுவொன்று இரகசிய கலந்துரையாடலை நடத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்தந்த அமைச்சுக்களின் நிறுவனங்களில் இராஜாங்க அமைச்சர்களுக்கு ஒதுக்காத அமைச்சரவை அமைச்சர்களின் செலவுத் தலையீடுகள் தொடர்பான வரவு செலவுத் திட்ட விவாதத்தில் ஆதரவளிக்காது இருப்பது  பற்றியே இவ்வாறு கலந்துரையாடப்பட்டது.

இந்த இரகசிய கலந்துரையாடலில் ஆளும் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சில அமைச்சரவை அமைச்சர்களுக்கு பல விடயங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் அந்த அமைச்சரவை அமைச்சர்கள் இராஜாங்க அமைச்சர்களுக்கு எவ்வித பொறுப்பும் வழங்கவில்லை எனவும் இந்த இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துரையாடலில் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, தற்போதைய அமைச்சரவையை நீக்கிவிட்டு புதிய அமைச்சரவையை ஸ்தாபிக்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் அறிவித்துள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட அதே அமைச்சரவையை ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்திலும் தொடரக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி புதிய அமைச்சரவையை நியமிக்க வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளது.

அமைச்சர்கள் சபையில் உள்ள அமைச்சர்கள் பலர் மொட்டுவின் சித்தாந்தத்திற்கு முரணான கருத்துக்களைக் கூறுவதால் அவர்களை மொட்டுவை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்களாக கருதக்கூடாது எனவும் மொட்டு கட்சி பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

எனவே, மொட்டுவின் ஆலோசனைகளுடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க புதிய அமைச்சரவையை ஸ்தாபிப்பார் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.