web log free
June 30, 2026

அவுஸ்திரேலியா உயர்ஸ்தானிகருடன் ஜேவிபி சந்திப்பு

அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் போல் ஸ்டீபன்ஸ் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர திஸாநாயக்க ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று (17) பிற்பகல் ஜே.வி.பி தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயத்தின் ஆராய்ச்சி மற்றும் தகவல் உத்தியோகத்தர் திரிவன் அன்னக்கரகே, பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், தேசிய மக்கள் சக்தியின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆகியோர் கலந்துகொண்டனர்.

தற்போது, ​​நாட்டில் நிலவும் பொருளாதார, சமூக மற்றும் அரசியல் பிரச்சினைகள் தொடர்பாகவும் விரிவான கருத்துப்பரிமாற்றம் இடம்பெற்றது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd