web log free
June 25, 2025

தொலைபேசி காதல் தொடர்பால் கற்பை பறிகொடுத்த சிறுமி

தந்திரிமலையில் உள்ள வீடொன்றில் வைத்து பாடசாலைச் சிறுமியை வன்புணர்வு செய்த 19 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளதாக மஹாவிளச்சி பொலிஸார் தெரிவித்தனர்.

அலவ்வ பிரதேசத்தைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட சிறுமி, கையடக்கத் தொலைபேசி ஊடாக உருவான காதல் காரணமாக, தந்திரிமலை மானெல்வாவ பிரதேசத்திற்கு வந்த போதே வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டதை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

பெமதுவ, மஹா விலாச்சிய, குலுபத்வெவ பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞரே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பலாத்காரத்திற்கு உள்ளான பெண் அலவ்வ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கந்தேகெதர பிரதேசத்தில் வசிக்கும் 14 வயதுடைய பாடசாலை மாணவி என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேகநபர் அனுராதபுரம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், பொல்கஹவெல நீதிமன்றத்திலும் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மகாவிளச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd