web log free
November 02, 2025

திலினி தொலைபேசியில் பேசியது யாருடன்? நீதிமன்றத்தில் வெளிவந்த தகவல்

திலினி பிரியமாலி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த போது அனுமதியின்றி எடுத்துச் செல்லப்பட்ட தொலைபேசி ஊடாக ஒருவருக்கு அழைப்பு எடுத்து பிணை பெற 300 இலட்சம் பணம் கேட்டதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இன்று (19) கொழும்பு மேலதிக நீதவான் ஷிலானி பெரேரா முன்னிலையில் அறிவித்தது. 

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலிக்கு எதிரான வழக்கு இன்று (19) நீதிமன்றில் அழைக்கப்பட்ட போதே குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இந்த உண்மைகளை அறிவித்தனர்.

சந்தேகநபர் சிறைச்சாலையில் அனுமதியின்றி வைத்திருந்த தொலைபேசி தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே இது தெரியவந்துள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் தெரிவித்தனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd