web log free
February 17, 2026

திலினி குறித்து பாராளுமன்றத்தில் கருத்து வெளியிட்ட நாமல்

தமக்கோ அல்லது தனது குடும்ப உறுப்பினர்களுக்கோ திலினி பிரியமாலியுடன் தொடர்பில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பெண்ணின் விடுதலைக்காக தாம் உழைத்ததாக எதிர்க்கட்சி உறுப்பினர் சமிந்த விஜேசிறியின் குற்றச்சாட்டு பொய்யானது எனவும், நாடாளுமன்றத்தின் சிறப்புரிமைக் குழுவில் முறைப்பாடு செய்யவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி, திலினி பிரியமாலியை விடுவிப்பதற்காக தான் பொலிஸாருக்கு அழைப்பு எடுத்ததாக குற்றஞ்சாட்டியுள்ளது முற்றிலும் பொய்யானது என அவர் மேலும் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் கருத்து வெளியிடும் போதே நாமல் எம்.பி இவ்வாறு கூறினார். 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd