web log free
March 12, 2026

பதவி விலகும் ஹரின், சாகலவிற்கு வாய்ப்பு

இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவராக ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் சாகல ரத்நாயக்கவை நியமிக்க கட்சி முகாமைத்துவ சபை தீர்மானித்துள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்ற கட்சி நிர்வாக சபையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவரான சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, முகாமைத்துவ சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டு, அந்தப் பதவியிலிருந்து விலக தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளார்.

புதிய தலைவரை நியமிப்பதற்கான முறையின் பிரகாரம் ஜனாதிபதியின் பணிப்பாளர் பிரதானியும் ஐக்கிய தேசிய கட்சியின் அமைப்பாளருமான சாகல ரத்நாயக்கவை அப்பதவிக்கு நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஹரின் பெர்னாண்டோ அடுத்த வாரம் பதவி விலகியதன் பின்னர் சாகல ரத்நாயக்க இந்த பதவியில் தனது கடமைகளை ஆரம்பிக்க உள்ளார்.

இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் ஐக்கிய தேசியக் கட்சியின் பழமையான தொழிற்சங்கங்களில் ஒன்றாகும். 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd