web log free
October 18, 2025

மலர்கிறது புதிய அரசியல் கூட்டணி

புதிய அரசியல் மாற்றத்திற்கான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் குழுவொன்று, ஐக்கிய தேசியக் கட்சியுடன் புதிய கூட்டணியை உருவாக்குவது தொடர்பில் தற்போது கலந்துரையாடி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இந்த புதிய கூட்டணியை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கம்பஹா, காலி, பொலன்னறுவை, பதுளை, கேகாலை போன்ற மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் மொட்டு முக்கியஸ்தர்கள் குழுவொன்று புதிய கூட்டணியில் இணையவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த குழு ஏற்கனவே அதிகாரப்பூர்வமற்ற முறையில் தொகுதிகளைப் பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd