web log free
April 26, 2025

பள்ளிவாசலுக்குள் இரு முஸ்லிம் குழுக்கள் இடையே மோதல்!

கிதொட்ட கிங்ககமவத்தே பள்ளிவாசல் ஒன்றில் இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் 12 பேர் காயமடைந்து காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காலி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த மோதல் நேற்று (26) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

இந்த பள்ளிவாசலில் நேற்றைய தினம் மத வைபவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாகவும், அங்கு கொடி ஏற்றப்பட்டமை தொடர்பில் இரு தரப்பினருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தடி மற்றும் கற்களால் தாக்கப்பட்டதில் ஒரு தரப்பினரின் வாகனமும் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பள்ளிவாசல் உரிமை தொடர்பான சம்பவத்தின் அடிப்படையில் இந்த இரு தரப்பினருக்கும் இடையில் சிறிது காலமாக தகராறு ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த மோதல் தொடர்பில் 04 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காலி தலைமையக பொலிஸ் பரிசோதகர் புலஸ்தி சொய்சா தலைமையில் விசாரணை நடத்தப்படுகிறது. 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd