web log free
November 05, 2025

மொட்டு கட்சிக்குள் மேலும் ஒரு தனிக் குழு! ரணில் காட்டில் மழை!!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து பிரிந்து தனியான குழுவாக அமைவதற்கு மற்றுமொரு அமைச்சர்கள் குழு தயாராகி வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அரசாங்கத்துடன் இணைந்து அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் பதவிகளை வகிக்கும் பலர் இந்த முயற்சியை மேற்கொண்டு வருவதாகவும் அதே வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

தற்போது பதவிகள் இல்லாமல் இருக்கும் மொட்டு எம்.பி.க்கள் குழுவும் இதில் இணைவதற்கு தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அடுத்த தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் நேரடியாக இணையாமல் தனியான குழுவாக ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணி அமைக்கும் நோக்கில் இக்குழு தனித்தனியாக ஒழுங்கமைக்க தயாராகி வருவதாக அறியமுடிகிறது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd