web log free
September 08, 2024

கொழும்பில் இன்று அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம்

அரசாங்கத்திற்கு எதிராக தொழிற்சங்கங்கள், வெகுஜன அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் இணைந்து ஏற்பாடு செய்துள்ள ஆர்ப்பாட்ட பேரணி மற்றும் ஊர்வலம் இன்று (02) கொழும்பில் நடைபெறவுள்ளது.

இன்று பிற்பகல் 3.00 மணிக்கு மருதானை எல்பின்ஸ்டன் திரையரங்கிற்கு முன்பாக இந்த எதிர்ப்பு பேரணி ஆரம்பமாகி அதன் முடிவில் பேரணியொன்று நடத்தப்படவுள்ளது.

'அடக்குமுறை, பொருளாதார ஒடுக்குமுறைக்கு எதிராக, உரிமைகளுக்காகப் போராடுவோம்' என்ற தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, இளம் சட்டத்தரணிகள் சங்கம், இலங்கை ஆசிரியர் சங்கம், இளம் ஊடகவியலாளர்கள் சங்கம், இலங்கை தொலைத்தொடர்பு ஊழியர் சங்கம், உட்பட பல தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புக்கள் ஆதரவு தெரிவித்திருந்தன.

சமகி ஜன பலவேகய, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, சுதந்திர தேசியப் பேரவை, சோசலிசக் கட்சி உள்ளிட்ட பல அரசியல் கட்சிகள் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டாலும் ஜே.வி.பி கலந்து கொள்ள வாய்ப்பில்லை.