web log free
April 29, 2026

கந்தகாடு முகாமில் இருந்து 50ற்கும் மேற்பட்ட கைதிகள் தப்பியோட்டம்

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இருந்த சுமார் 50 கைதிகள் தப்பிச் சென்றுள்ளனர்.

புனர்வாழ்வு நிலையத்தில் இரண்டு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலின் போது கைதிகள் குழுவொன்று தப்பிச் சென்றுள்ளது.

தப்பிச் சென்றவர்களைக் கண்டுபிடிப்பதற்காக விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd