web log free
April 20, 2024

டயானா கமகேவிற்கு நீதிமன்றம் தடை

இராஜாங்க அமைச்சர் டயானா கமகே வெளிநாடு செல்வதற்கு இம்மாதம் 17ஆம் திகதி வரை தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தினால் இராஜாங்க அமைச்சருக்கு இன்று (11) காலை இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தற்போது, ​​அவர் மீது குடியுரிமை மோசடி தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பிரித்தானியாவிலும் இலங்கையிலும் இரட்டைக் குடியுரிமையுடன் இரண்டு கடவுச்சீட்டுகளை வைத்திருப்பதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.