web log free
August 20, 2025

பேரணி வந்த இரு பெண்கள் கைது

பல்கலைக்கழகங்க மாணவர் ஒன்றியத்தின்  பிக்கு அழைப்பாளர் கல்வெவ சிறிதம்ம தேரர் மற்றும் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே ஆகியோரை விடுவிக்குமாறு அரசாங்கத்திடம் கோரியமைக்காக ஐந்து பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்களிடம் தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று காலை 9.30 மணியளவில் களுத்துறை போதியை  வழிபட்ட பின்னர் தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறிதம்ம தேரர் மற்றும் வசந்த முதலி ஆகியோரின் உருவங்கள் அடங்கிய இரண்டு பதாதைகளை ஏந்தியவாறு குறித்த இரு பெண்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் காலி வீதியூடாக பேருந்தில் கொழும்பு நோக்கி வந்த இரு பெண்கள் உள்ளிட்ட குழுவினர் களுத்துறை வடக்கு பகுதியில் இருந்து இறங்கி மீண்டும் பேரணியாக செல்ல ஆரம்பித்துள்ளனர்.

அதனையடுத்து வாத்துவ பின்வத்தை மற்றும் பாணந்துறை தெற்கு பொலிஸ் அதிகாரிகள் பல தடவைகள் அவர்களை திசை திருப்ப முற்பட்டதையடுத்து, அந்த நேரத்தில் ஆர்ப்பாட்ட பேரணிக்கு வந்த மக்களுக்கும் பொலிஸ் அதிகாரிகளுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd