web log free
November 06, 2025

அநுரகுமாரவின் பின்னால் அணிதிரளும் உயர் பொலிஸ் அதிகாரிகள்!

ஓய்வுபெற்ற சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்கள் மற்றும் பிரதி பொலிஸ் மா அதிபர்கள் பலர் ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவை சந்தித்து தேசிய மட்டத்தில் அவருக்கு ஆதரவளிக்க இணங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, நாடு பூராகவும் ஜே.வி.பியின் தேர்தல் தொகுதிகளை நடத்தும் வேலைத்திட்டத்தை முடிவுக்கு கொண்டுவர தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வசந்த முதலிகே மற்றும் சிறிதம்ம தேரர் ஆகியோர் பயங்கரவாத சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை தொடர்பிலும் ஜே.வி.பியின் மத்திய குழுவில் பேசப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தொடர்ந்தும் கேள்வி எழுப்பப்படும் என கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க மத்திய குழுவில் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd